புதுடெல்லி: மகாவீர் சக்ரா விருது பெற்ற ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் மோகன் வோரா, கொரோனா தொற்றினால் உயிரிழந்தார். கடந்த 1932ம் ஆண்டு சிம்லாவில் பிறந்தவர் ராஜ் மோகன் வோரா. ராணுவத்தில் சேர்ந்த இவர், கடந்த 1971ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்றார். இவர் எதிரிகளால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். எனினும், இவரது தலைமையிலான படைப் பிரிவானது எதிரிகளின் 27 பீரங்கிகளை தாக்கி அழித்தது. இவர் இந்தியா-பாகிஸ்தான் போரின் கதாநாயகனாக வர்ணிக்கப்பட்டார்.