லடாக் எல்லையில் சீன வீரர்களுடன் நிகழ்ந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல்

டெல்லி: லடாக் எல்லையில் சீன வீரர்களுடன் நிகழ்ந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ அதிகாரி, 2 வீரர்கள் என 3 பேர் விரமரணமடைந்ததாக முன்னதாக கூறப்பட்டது. சீனா தரப்பிலும் சிலர் உயிரிழந்திருக்கக்கூடும் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related Stories: