புதுடெல்லி: அதிக மெத்தனாலை பயன்படுத்தி நச்சுதன்மையுள்ள போலி சானிடைசர் தயாரித்தல் மற்றும் போலி பிபிஇ விற்பனை குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சிபிஐ எச்சரித்துள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சானிடைசர் மற்றும் பிபிஇ மற்றும் இதர கொரோனா தொடர்பான மருத்துவப் பொருட்கள் விநியோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில மோசடி கும்பல்கள் போலி சானிடைசர்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்வதாக சிபிஐக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.