சபரிமலை கோயில் நடைதிறப்பு

திருவனந்தபுரம்: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை  ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5  மணிக்கு திறக்கப்பட்டது.  இன்று முதல்  19ம் தேதி வரை ஆனி மாத பூஜைகள் நடக்கிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி  இல்லை. இதனால் மாத பூஜைகளின் போது  வழக்கமாக நடத்தப்படும் நெய்யபிஷேகம்,  உதயாஸ்தமன பூஜை, படி பூஜை,  களபாபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், புஷ்பாபிஷேகம்  ஆகிய பூஜைகள் நடைபெறாது என்று  அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 19ம் தேதி  இரவு 7.30 மணிக்கு ேகாயில் நடை  சாத்தப்படும்.

Related Stories: