சிவகாசி : சிவகாசியில் ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றி பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளான். சாதனை படைத்த மாணவன் சாட்சியார்புரத்தைச் சேர்ந்த வீரபத்திரன் - வாணி தம்பதியினரின் மகன் நிகில் ஆதித்யன் ஆவார். இவர் கோவையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றியமைக்க முடிவு செய்தார் நிகில். அவர் அமெரிக்காவில் உள்ள எல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் முதலீடு சந்தை என்ற ஆன்லைன் படிப்பில் சேர்ந்தார்.