சென்னை: குரூப் 1 தேர்வு, குரூப் 2 தேர்வு, குரூப் 2ஏ தேர்வு, குரூப் 4 தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் கொரோனா தாக்கம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: டிஎன்பிஸ்சி தேர்வு தற்போதைக்கு நடத்த வாய்ப்பு இல்லை கொரோனாவால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் சரியான உடன், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படும்.