திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாத இடைவெளிக்கு பிறகு வெளிமாநில பக்தர்களும் தரிசனம் செய்ய நேற்று முன்தினம் முதல் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ஆன்லைனில் 300 கட்டண முன்பதிவு டிக்கெட் பெற்ற வெளிமாநில பக்தர்களால், இலவச தரிசன டிக்கெட் பெற்றவர்கள் இ-பாஸ் கிடைக்காததால் தரிசனம் செய்ய செல்ல முடியவில்லை. உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 7.30 மணி முதல் இரவு 8 மணி வரை நீண்ட வரிசையில் வந்து தரிசித்தனர். இதில், ஒரே நாளில் 6,998 பேர் தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.