மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான அசோக் சவாண், அமைச்சர் ஜிதேந்திர அவாத் ஆகியோருக்கு முதலில் கொரோனா உறுதியாகியிருந்தது. அவர்கள் 2 பேரும் மருத்துவ சிகிச்சையில் முழுவதும் குணமாகினர். இந்நிலையில், கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் ஒருவருக்கும் புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மும்பையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.