திருமலை: ஆந்திராவில் சந்திரபாபு ஆட்சியில் நடந்த ஊழல்களை சிபிஐ விசாரிக்க பரிந்துரைத்து முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. ஆந்திராவின் குண்டூர் அடுத்த தாடேபல்லியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை வரும் 16ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர், செய்தி துறை அமைச்சர் பேர்னி நானி நிருபர்களிடம் கூறியதாவது: