சிம்லா: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் நேற்று டெல்லியில் உயிரிழந்தார். இவர் கடந்த 1ம் தேதி இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் காவல்துறை தலைமையகத்துக்கு சென்று வந்துள்ளார். மேலும், டிஜிபி உட்பட மேலும் சில அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அதே நாளில் அவர் டெல்லி திரும்பியுள்ளார். இந்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.