ஒடிசாவில் பயிற்சி விமானம் விபத்து தமிழக விமானி, கேப்டன் பரிதாப பலி

புவனேஸ்வர்: ஒடிசாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில், தமிழக விமானியும், கேப்டனும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒடிசாவின் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள பைரசல் விமான தளத்தில் இருந்து பயிற்சி விமானம் ஒன்றில் விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பயிற்சி விமானம் திடீரென பைலட்டின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானி அனீஷ் பாத்திமா, பீகாரைச் சேர்ந்த கேப்டன் சஞ்சீப் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அனீஷ் பாத்திமா சென்னை, பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் விமான நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் முன்னாள் தாம்பரம் காவல் உதவி ஆணையர் முகமது கோரியின் மகள். இவரது  உடலை தமிழகம் கொண்டு வர அவரின் சகோதரர் ஒடிசா சென்றுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: