தர்மபுரி: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தவுள்ள தேர்வு துறை இணை இயக்குநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தர்மபுரி பிடமனேரி மாந்தோப்பு பகுதியை சேர்ந்த 55வயது பள்ளி கல்வித்துறை அதிகாரி, சென்னையில் தேர்வு துறை இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தக்கூடிய இவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் நிலையில், அவர் சென்னையில் இருந்து வந்ததால், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.