ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரேபான் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ,தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த சண்டையில் வீரர்களுக்கு எ்ந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் கலோனல் ராஜேஷ் காலியா தெரிவித்தார்.