திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தாடேபல்லியில் உள்ள முகாம் அலுவலகத்தில் ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுக்காக 2ம் கட்டமாக ₹10 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் பல்வேறு மாவட்ட வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஜெகன்மோகன் பேசியதாவது:ஆட்டோ, டாக்சி, ஓட்டி குடும்பம் நடத்தி வரும் எனது சகோதரர்களுக்கு உதவியாக இருக்க விரும்பினேன். இதற்காக கடந்தாண்டு அக்டோபர் 4ம் தேதி ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா என்ற திட்டம் மூலம் ₹10 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கினேன். தொடர்ந்து 2ம் கட்டமாக இந்தாண்டும் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ₹10 ஆயிரம் வழங்கியுள்ளேன்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் வாகன மித்ரா திட்டத்தின் கீழ் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு 2ம் கட்டமாக ரூ.10 ஆயிரம் நிதி உதவி: முதல்வர் தொடங்கி வைத்தார்
- ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா
- ஆந்திரப் பிரதேசம்
- ரூ
- முதல் அமைச்சர்
- டாக்ஸி டிரைவர்கள்
- ஆயிரம் நிதி உதவி ஆட்டோ