மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 103 பேர் உயிரிழப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,300 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 103 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 2465-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: