சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் வேப்பனபல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம், விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ் உள்ளிட்ட செடிகளை விளைவித்து வந்தார். இந்நிலையில் நேற்று நிலத்திற்கு நீர் பாய்ச்ச சென்றபோது அங்கு ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் அவற்றையெல்லாம் சாப்பிட்டு சேதப்படுத்தி உள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியம் உடனடியாக இதுபற்றி குப்பம் மண்டலத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வேளாண் அதிகாரி சிவகுமார் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தபோது வெட்டுக்கிளிகள் அந்த செடிகள் மீது அமர்ந்து அதை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. என்னசெய்வது என்று தெரியாத அதிகாரிகள் உடனே சித்தூர் மாவட்ட வேளாண் துறை அதிகாரி விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் அங்கு வந்து ஆய்வு நடத்தினார்.