அரியானா: அரியானாவில் உள்ள அரசின் திறந்தவெளி கிடங்கில் பல ஆயிரம் டன் கோதுமை மூட்டைகள் வீணாகி உபயோகப்படுத்த முடியாத நிலையில் கிடக்கின்றன. ஊரடங்கு காரணமாக பல வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் போதிய உணவின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல லட்சம் பேர் பசி, பட்டினியால் பரிதவித்து வருகின்றனர். ஆனால், அரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள நகுராவில் அரசு தானிய கிடங்கில் திறந்த நிலையில் கோதுமை மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.