ஸ்ரீவைகுண்டம்: செய்துங்கநல்லூரில் விவசாயி ஒருவர், தான் வளர்க்கும் பசுவுக்கு வளைகாப்பு விழா நடத்தி பாசத்தை வெளிப்படுத்தினார். தூத்துக்குடி மாவட்டம், செங்துங்கநல்லூர் அக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ்(58). விவசாயியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வளர்த்த பசு ஒன்று கன்று ஈன்றது. பசுவின் பால் முழுவதும் கன்றுக்குட்டிக்கு கிடைக்க வேண்டும் எனக் கருதிய பால்ராஜ் குடும்பத்தினர், பாலை கறக்காமல் முழுவதையும் கன்றுக்குட்டியை குடிக்க வைத்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு மாதத்திற்குள் பசு திடீரென இறந்தது. இதனால் தாயை இழந்த கன்றுக்குட்டியை பால்ராஜ் குடும்பத்தினர் தங்கள் பிள்ளை போல் பாசத்துடன் வளர்த்து வந்தனர்.