ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் திட்டம் பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறையின் தகவலை அடுத்து புல்வாமா மாவட்டம் ராஜ்போராவில் நேற்று இரவு ஆர்பிஎப் மற்றும் ராணுவ வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதால் ஓட்டுநர் தப்பிவிட்டார்.காரின் பின் இருக்கையில் 20 கிலோ வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.