நெல்லை: நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் தீவிரமடைந்து உள்ளது. இதுவரை 17 ஆயிரத்து 82 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 8 ஆயிரத்து 731 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 118 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 329 ஆக உயர்ந்து உள்ளது. ஊரடங்கால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு இருந்த விமான சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து, நெல்லையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது என கூறப்படுகிறது.