புதுடெல்லி: ‘கொரோனாவுக்கு எதிரான போரில் இலங்கை, மொரீஷியஸ் நாடுகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும்,’ என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தனது டிவிட்டர் பதிவில், `கொரோனா தொற்று, பொருளாதார பாதிப்பில் இருந்து நட்பு நாடான இலங்கை விடுபடுதவற்கு தேவையான ஆதரவை இந்தியா தொடர்ந்து அளிக்கும்,’ என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, மோடியை தொடர்பு கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இலங்கையில் இந்திய தனியார் துறையினரின் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்து ஆலோசித்தார்.