பெரம்பூர்: ஊரடங்கு காரணமாக சென்னையில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இவர்களில் பலர், வீட்டு மொட்டை மாடிகளில் நின்று காற்றாடி பறக்கவிட்டு வருகின்றனர். சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் பறக்க விடுவதற்கு போலீசார் தடை விதித்து இருந்தும், பல இடங்களில் தொடர்ந்து மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்க விடப்படுகிறது. இந்நிலையில், கொடுங்கையூர் பகுதியில் சிலர் வீடுகளிலேயே மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்து வருவதாக எம்கேபி நகர் உதவி கமிஷனர் ஹரிகுமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் அப்ரகாம் குரூஸ் மற்றும் போலீசார் கொடுங்கையூர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.