அமராவதி: ஆந்திராவில் வரும் ஆகஸ்டு 3ம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திராவில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நேற்று அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.