சென்னை : உரிமை மின்சாரத்தை நீக்கி, உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார திட்டத்தை அனைத்து மாநிலங்களும் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரத்து செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.மத்திய புதிய மின்சார சட்டம் நடைமுறைக்கு வந்தால், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், குடிசைகள் மற்றும் பசுமை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர் உள்ளிட்ட சில தொழில் பிரிவினருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ஆகியவை ரத்து செய்யப்படும்.