தோடா: ஜம்மு காஷ்மீரில் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இதில் ராணுவ வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரின் கண்டானா பகுதியில் போஸ்டா போட்ரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு வீரர்கள் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு ராஷ்ட்ரிய ரைபிள் படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் உள்ளிட்டோர் இணைந்து தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.