திருவனந்தபுரம்: வாய், மூக்கை நன்றாக மூடாமல், கழுத்தில் மாஸ்க்கை தொங்கவிட்டு பொது இடங்களில் வலம் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சமூக விலகல், முகக்கவசம் அணிவது உட்பட பல பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளன. ஆனாலும் ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் வலம்வந்த வண்ணம் உள்ளனர். கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளம் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக போலீசார் தினமும் நூற்றுக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனால் சிலர் முகக்கவசத்தை அணியாமல், கழுத்தில் தொங்கவிட்டவாறு நடமாடி வருகின்றனர்.