திருமலை: ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கால் காளஹஸ்தி சிவன் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கலாம். பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பக்தர்களை சுரங்க கிருமிநாசினி பாதை வழியாக சமூக இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டும். ஆதார் அட்டை மூலமாக ஆன்லைனில் டிக்கெட் வழங்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 250 பக்தர்களுக்கு அனுமதிக்கலாம்.