கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கவரப்பேட்டை எஸ்.ஐ. சிவராஜ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். சோதனையில், குட்கா வைத்திருந்தது தெரியவந்தது. பின்பு இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த இருவரையும் பிடித்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.