புதுடெல்லி: வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வகையில் நாளை மறுதினம் முதல் 31 நாடுகளுக்கு 149 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் அழைத்து வருவதற்காக ‘வந்தே பாரத்’ என்ற சிறப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது இதன் மூலம், முதல் கட்டமாக கடந்த 7ம் தேதி முதல் இன்று வரை வெளிநாடுகளுக்கு 64 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 12 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.