திருவனந்தபுரம்: கேரளாவில் கள் விற்பனைக்கு அனுமதி உண்டு. மாநிலம் முழுவதும் 5,185 கள்ளுக்கடைகள் உள்ளன. கொரோனா காரணமாக கேரளாவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கள்ளுக்கடைகள், மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், 13ம் தேதி (நேற்று) முதல் கள்ளுக்கடைகள் மட்டும் திறக்கப்படும் என கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்தார். அதன்படி, நேற்று காலை 9 மணியளவில் திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம் உட்பட பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், கள் வரத்து குறைந்ததால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது. கள் குடிப்பதற்காக ஆசையாக வந்த மது பிரியர்கள், இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இருப்பினும், ஒரு சில தினங்களில் கள் உற்பத்தி அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.