என்.எல்.சி. தீ விபத்து: உயிரிழப்பு 4 ஆக அதிகரிப்பு

நெய்வேலி:  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் உள்ளது. இங்குள்ள 2ம் அனல் மின்நிலையத்தில் கடந்த 8ம் தேதி எதிர்பாராதவிதமாக பாய்லரில் தீப்பற்றி வெடித்தது. அப்போது பணியில் இருந்த 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தீ விபத்தில் ஊழியர் ஷர்புதீன் மற்றும் ஒப்பந்த தொழிலாளி சண்முகம், நிரந்தர தொழிலாளி பாவாடை (51) ஆகியோர் உயிரிழந்தனர் இவர்களை தொடர்ந்து, நேற்று சிகிச்சை பலனின்றி பாலமுருகன் (36) என்பவர் உயிரிழந்தார். இவர் ஒப்பந்த தொழிலாளி ஆவார். மேலும் 4 தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: