திருமலை: ஆந்திரா, குண்டூர், தாடேபல்லியில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் உணவுத்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய அரிசி தரமானதாக இல்லாததால் பொதுமக்கள் அதனை பெற்று பயன்படுத்தாமல் இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். எனவே அவ்வாறு இல்லாமல் அரசு சார்பில் வழங்கக் கூடிய அரிசி தரமானதாக இருப்பதோடு பொதுமக்களும் அரசு வழங்கும் அரிசியை சமைத்து சாப்பிடும் விதமாக இருக்க வேண்டும். அதற்கேற்ப தரத்துடன் கூடிய அரிசியை பொதுமக்களின் வீடு தேடி வழங்கப்படும் என்று எனது பாதை யாத்திரையின்போது தெரிவித்தேன்.