வருசநாடு: உரிய விலை கிடைக்காததால், கடமலை மயிலை ஒன்றியத்தில் அறுவடை செய்த தக்காளிகளை விவசாயிகள் தோட்டங்களில் தேக்கி வைத்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தற்போது தக்காளி விவசாய சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இப்பகுதிகளில் விளைந்த தக்காளிகளை தேனி, ஆண்டிபட்டி, மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு தினமும் ஏற்றுமதி செய்து வந்தனர்.