அதன் ஒரு பகுதியாக உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு மற்றும் அதன் சிகிச்சை பெறுவது குறித்து இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு செயலாக்கம் ( ஐஎச்சிஐ) Indian Hypertension Control Initiative) என்ற பெயரில் ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2018 ம் ஆண்டு 5 மாநிலங்களில் மட்டும் ஆய்வு செய்த நிலையில் 2022ம் ஆண்டு ஆந்திரா, தமிழ்நாடு, தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் 104 மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 2 சதவீதம் மக்கள் மட்டுமே முறையாக சிகிச்சை பெற்று உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இருப்பதாகவும் தெரிவந்துள்ளது. ஒன்றிய அரசு தொற்று இல்லாத நோய்களால் ஏற்படும் இறப்பை 2025ம் ஆண்டுக்குள் 25% குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
அதில் முக்கியமாக உயர் ரத்த அழுத்த நோய் இறப்பை குறைப்பது மிகவும் முக்கியமானது எனஐசிஎம் ஆர் தெரிவித்துள்ளது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க, ஒரு நாளுக்கு 5 கிராம் உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும், பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும், பேக்கரி உணவை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும், காபினேட் உள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும், வாரத்திற்கு 150 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க, ஒரு நாளுக்கு 5 கிராம் உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்
The post இந்தியாவில் 20 கோடி மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.