அதன்படி 2024-25ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரியில் நடத்தப்பட்டு, முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஜேஇஇ 2ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 4 முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான 2ம் தாள் தேர்வு ஏப்ரல் 12ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 420 மையங்களில் 52,935 மாணவர்கள் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியானது.
இதையடுத்து மாணவர்கள் /jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். இதுதவிர இருகட்ட முதன்மைத் தேர்வுகளிலும் தமிழக மாணவர் ஆர்.முத்து(பி.ஆர்க்) உட்பட 4 பேர் தேசியளவில் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவ்விரு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பி.ஆர்க், பி.பிளானிங் ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு appeared first on Dinakaran.