வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர முடிவு செய்யப்பட்டது குறித்து வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர முடிவு செய்யப்பட்டது குறித்து வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். வேலையிழந்தவர்கள், குறுகியகால விசா வைத்திருப்பவர்கள், கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்தியாவில் அவர்கள் சொந்த செலவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். தெர்மல் சோதனை நடத்தப்படும்; அறிகுறி இல்லாதவர்களுக்கே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: