திருவனந்தபுரம்: இந்தியாவில் முதன்முறையாக சசிதரூர் எம்பி ஏற்பாட்டில் கேரளாவுக்கு காய்ச்சல் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் நவீன கேமராக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்க்கான முதல் அறிகுறியாக காய்ச்சல் கருதப்படுகிறது. இந்த காய்ச்சலை கண்டறியும் வகையில், உடல் வெப்பநிலையை அளவிட தெர்மல் ஸ்கேனர் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொருவராக மட்டுமே காய்ச்சல் உள்ளதா என கண்டறிய முடியும். பஸ், ரயில் மற்றும் விமான நிலையங்கள் உட்பட ஆட்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தெர்மல் ஸ்கேனர் கருவியை பயன்படுத்தி உடல் வெப்பநிலையை கண்டுபிடிக்க அதிக நேரத்ைத செலவிட வேண்டும்.