திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டுமாடு, மான் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு ஆண்டுதோறும் வனவிலங்குகள் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கணக்கெடுப்பு கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்றது.