கார்வார்: பாஜ எம்.பி. அனந்த்குமார் ஹெக்டேயின் டிவிட்டர் கணக்கை அந்நிறுவனம் லாக் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜ எம்.பி.யுமான அனந்த்குமார் ஹெக்டே 2016ம் ஆண்டு தனது பெயரில் டிவிட்டரில் கணக்கு தொடங்கினார். இது வரை 74,300 ஆதரவாளர்கள் உள்ளனர். சமீபத்தில் கொரோனா தொற்று நாட்டில் பரவத் தொடங்கியதன் காரணம் குறித்து பலரும் பலவிதமாக கருத்துக் கூறி வருகின்றனர். அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி என எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே தொடர்ந்து டிவிட்டரில் பதிவிட்டு வந்தார்.