கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி அண்ணா சாலையை சேர்ந்தவர் ஸ்டீவன்சன் (55). கூடுவாஞ்சேரி டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி உமா (38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில், செங்கல்பட்டில் உள்ள முதல் மனைவியை, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஸ்டீவன்சன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்தார். 2வது மனைவி கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் பஜனை கோயில் தெருவில் உள்ளார். உமா என்பவரை 3வது செய்து ெகாண்டார். 3 மனைவிகளையும் ஸ்டீவன்சன் காதல் திருமணம் செய்துள்ளார். உமா மறைமலைநகர் அடுத்த மல்ரோசாபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். ஸ்டீவன்சனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பிள்ளைகள் 2 பேரும், உமாவின் தாயுடன் பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்தனர்.