நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு டாக்டர் கைது

வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றுபவர் சீனிவாசன் (28). இவர் அங்குள்ள 31 வயது நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அப்பெண் தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண் அளித்த புகாரின்பேரில் வத்தலக்குண்டு போலீசார், சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர். இதில் சீனிவாசன், நர்சுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் இரவு டாக்டர் சீனிவாசனை கைது செய்தனர்.

The post நர்சுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு டாக்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: