குறைந்த விலையில் தங்க நாணயம் என ரூ.1.16 கோடி மோசடி: பெண் மீது புகார்

ராணிப்பேட்டை: ராணிப்ேபட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் உட்பட பெண்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுக்களை பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

இதுபற்றி தமிழரசன் கூறுகையில், ராணிப்பேட்டை அருகே மாந்தாங்கல் காந்தி நகரை சேர்ந்த சசிகலா என்பவர் ஈரோட்டில் உள்ள தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஒரு கிராம் தங்க நாணயத்தை ₹1,000 குறைத்து கொடுப்பதாக கூறி பலரிடம் சுமார் ₹1.16 கோடி வரை மோசடி செய்துவிட்டார். இந்த மோசடியில் ஒரு கும்பலே ஈடுபட்டுள்ளது. இதுபற்றி புகார் மனுவை பெட்டியில் போட்டுள்ளோம் என்றார்.

The post குறைந்த விலையில் தங்க நாணயம் என ரூ.1.16 கோடி மோசடி: பெண் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: