லண்டன்: கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் ‘வீரர்கள், பணியாளர்களுக்கான ஊதியத்தை பிடித்தம் ஏதும் செய்யாமல் முழுமையாக வழங்குவோம்’ என செல்சியா கால்பந்து கிளப் உறுதியாக தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் விளையாட்டுத்துறை முடங்கிக் கிடக்கும் நிலையில், விளையாட்டு கிளப்கள் பொருளாதார இழப்பை சமாளிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சில கால்பந்து கிளப்கள் வெளிப்படையாக வீரர்களுக்கான ஊதியத்தை குறைப்பதற்கான திட்டமிடலில் இருப்பதாக அறிவித்துள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த அர்செனல், வீரர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கான ஊதியத்தில் 12.5 சதவீதத்தை குறைக்க உள்ளது.