லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனை செய்வதில் வெளிப்படை தன்மை தேவை என காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதா என அரசு சார்பில் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா தனது டிவிட்டர் பதிவில், ‘‘உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை குறித்து பெரும்பாலான மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.