ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வீடியோ கான்பரன்ஸ் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் பனியன் அணிந்து இருந்ததால் கோபமடைந்த நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வருவதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அவசர மனுக்கள் மட்டும் ஆன்லைனில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் லால்ராம் என்பவருக்கு ஜாமீன் பெறுவதற்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை நடந்தது. இதில் லால்ராமுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ரவீந்திரகுமார் பாலிவால் ஆஜராகி வந்தார். இந்த வழக்கு நேற்று வீடியோ கான்பரன்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாதத்தை கேட்க, நீதிபதி சஞ்சீ–்வ் பிரகாஷ் தயாராக இருந்தார்.