ஷார்ஜாவில் 1998ம் ஆண்டு நடந்த கோகோ கோலா கோப்பை தொடரில், ஏப்ரல் 22ம் தேதி நடந்த போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. பெவன் 101, மார்க் வாஹ் 81 ரன் விளாசினர்.
பாலைவனப் புயல் காரணமாக ஆட்டம் 25 நிமிடத்துக்கு தடைபட்டதால், இந்திய அணி வெற்றி பெற 46 ஓவரில் 276 ரன் எடுக்க வேண்டும் அல்லது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 46 ஓவரில் 237 ரன் எடுக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது.