ஐபிஎல் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

ஐபிஎல் கிரிகெட் போட்டிக்கு ஆடுகளத்தை சிறப்பாக பராமரித்ததற்காக 10 மைதானங்களின் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். குவஹாத்தி, தரம்சாலா, விசாகப்பட்டின மைதான ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடுகளம் நன்றாக பராமரிக்கப்பட்டதால் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் 1,260 சிக்சர்கள் விளாசப்பட்டன.

The post ஐபிஎல் ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா appeared first on Dinakaran.

Related Stories: