கார்கஸ்: கொரோனாவை தடுக்க ஆல்கஹால் அடங்கிய கிருமி நாசினியை கொண்டு கைகழுவ வேண்டும் என்பது வலியுறுத்தப்படும் சூழலில், வெனிசுலாவில் இத்தகைய கிருமி நாசினிகள் கிடைப்பது அரிதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,54,295-ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றால் 22,51,768 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 5,74,383 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.