சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றை தடுப்பதற்கு தமிழ்நாட்டில் செய்யப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே உள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மூலமாக மட்டுமே கொரோனா தொற்றைத் துல்லியமாக உறுதிப்படுத்த முடியும். இதுதான் கொரோனா தொற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கான ஒரேவழியாகும். இந்த வழியை இதுவரை தமிழக அரசு கடைபிடித்ததாக தெரியவில்லை.தற்போது, மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை.