காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 5 வயது சிறுமிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் 5 வயது சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சுகாதார துறையினர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் மீனாட்சிபுரம் மஹபூப் பாளையம் பள்ளிவாசல் தெரு பகுதியை காரைக்குடி நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி லாக் செய்யப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தடுப்பு ஏற்படுத்தி போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.